Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, சீர்வரிசை பொருட்கள் அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்

செப்டம்பர் 28, 2023 11:40

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வன், பாலசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், இராசிபுரம் வட்டாட்சியர் சு.சரவணன், இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வனிதா, தனம், ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் எம்.பழனிவேல், மகேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்